எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை அமல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 03 மின்மாற்றிகள் செயலிழந்ததால்,

மின்சார தேவையை நிர்வகிக்கும் பொருட்டு, இலங்கை மின்சார சபை நேற்றும் இன்றும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தைத் தடை செய்ய முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web