2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்பட உள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, எதிர்வரும் 13ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருப்பார்.
அங்கு நடக்கும் 2025 உலக அரச உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள பல துறைகள் குறித்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.