​முன்னிலை சோஷிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நேற்று (9) கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து கைது செய்யப்படும்போதே பொலிஸாரினால் தாக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையைில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க தூதுவராலயத்தின் முன்பாக நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கொரோனா பரம்பலுக்குகக் காரணமாகுமெனக் கூறி பொலிஸாரினால் நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. அந்த உத்தரவை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பே முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின்போது துமிந்த நாகமுவை வலுக்கட்டாயமாக பொலிஸார் இழுத்துச் செல்லும் காட்சிகள் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளில் காணப்படுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி