களுத்துறை தெற்கு தலைமையக

பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ ஜீப்பின் இயந்திரத்தில் உப்பு கலக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரியின் ஜீப் இயந்திரம் திடீரென பழுதடைந்தமை தொடர்பில் பொலிஸ் ஜீப்களை புதுப்பித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையின் போது இது தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
 
சமையலுக்கு பயன்படுத்தப்படாமல் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை உப்பு என்பது தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 
 
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உயர பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி