அதுருகிரியவில் கிளப் வசந்த

உட்பட இருவரைக் கொன்று நால்வரைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய இரு சந்தேக நபர்களை மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
 
இதன்படி, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்தக் குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த  குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் காரின் சாரதியையும் கொரத்தோட்டை பிரதேசத்தில் இருந்து வெலிஹிந்த பிரதேசத்துக்கு சந்தேக நபர்களில் ஒருவர் வேனில் ஏற்றிச் சென்று பஸ்ஸில் ஏற்றிச் சென்று பின்னர் வேனை புளத்சிங்கள பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதி ஊடாக திக்வெல்ல பகுதிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும் காரின் சாரதியையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு செல்ல கதிர்காமம் பகுதியில் பஸ்ஸை மறைத்து வைத்தவர் மற்றைய சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த காலப்பகுதியில் சந்தேகநபர் வட்ஸ்அப் ஊடாக வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அது தொடர்பான கையடக்கத் தொலைபேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
 
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி