கொழும்பு நகர மண்டபத்தில் 

உள்ள கண் வைத்தியசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிக்குள் வைத்து கத்தியால் குத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் குறித்து இன்று (23) காலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
உயிரிழந்தவர் அத்துருகிரிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் மாத்தறை மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்து இவர் சேவையில் ஈடுபட்டுள்ளார்.
 
கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி