1200 x 80 DMirror

 
 

பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத்

தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக வேட்புமனுக்களை கையளித்த ஒருவர் மீது நேற்று (21) இரவு மித்தெனிய ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
ஜுலம்பிட்டியவில் வசிக்கும் கே.கே. பிரபாத் இந்திக என்ற நபரே சுடப்பட்டதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி