கொழும்பு குருந்துவத்தையில்
( கறுவாத் தோட்டம்) உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொம்பனி. வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவனும், மாணவியும் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து காரில் வந்ததும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து 3ஆவது மாடியில் விழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜயமான்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன