எச்.எம்.எம்.பர்ஸான்
மோட்டார் சைக்கிள் - வேன்
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (29) கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் - பதுளை வீதியில் இடம்பெற்றுள்ளது.
செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான தோமஸ் டயஸ் என்பவர் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த வேன் குறித்த நபர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
![IMG 20240630 074255 800 x 533 pixel](/images/IMG_20240630_074255_800_x_533_pixel.jpg)
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
![IMG 20240630 074233 800 x 533 pixel](/images/IMG_20240630_074233_800_x_533_pixel.jpg)
விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார் வேனின் சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.