ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நிச்சயமாக தனி வேட்பாளரை முன்வைக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் வெற்றிபெற முடியாது என கருதினால் ஜனாதிபதி தேர்தலை கட்டாயமாக ஒத்திவைப்பார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

யூடியூப் செனல் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நவம்பர் மாதத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுமா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை, இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டில் கடுமையான குழப்பம் ஏற்படலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் பொதுத் தேர்தலை நடத்துவார் என்று கூறும் முன்னாள் முன்னாள் ஜனாதிபதிகளின் உறவினரான உதயங்க வீரதுங்க, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மேற்குலக நாடுகளிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"தீர்க்க முடியாத பிரச்சினை" காரணமாக ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் முகவர் போன்ற "சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து" எந்த ஆட்சேபனையும் இருக்காது எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மொட்டுக் கட்சியலிருந்து இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர். மக்கள் ராஜபக்க்ஷர்களை விரும்பாவிட்டால் நாமல் ராஜபக்ஷவுக்கு பதிலாக தம்மிக்க பெரேராவே பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி