ஹங்வெல்லவில் இரண்டு குழந்தைகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்து 

வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயன்ற நபரை  துணிச்சலுடன்  செயற்பட்டு   பாதுகாப்பாக இரு குழந்தைகளையும் மீட்டு சந்தேக நபரிடமிருந்த கைக்குண்டையும் கைப்பற்றிய  பொலிஸ்  அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர்  டிலான் அலஸ் தலைமையில் பணமப் பரிசு  வழங்கப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 ஹங்வெல்லவில் இரண்டு குழந்தைகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்து  வெடிகுண்டை வெடிக்கச் செய்ய முயன்ற நபரை  துணிச்சலுடன்  செயற்பட்டு   பாதுகாப்பாக இரு குழந்தைகளையும் மீட்டு சந்தேக நபரிடமிருந்த கைக்குண்டையும் கைப்பற்றிய  பொலிஸ்  அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர்  டிலான் அலஸ் தலைமையில் பணமப் பரிசு  வழங்கப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.கே.பி.எஸ்.என். குணரத்ன மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் திமுத்து சமரநாயக்க மற்றும் 8 விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு பொலிஸ் பரிசு நிதியிலிருந்து  தலா 75,000 ரூபா பணம்  மற்றும்   பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி