எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பெசில் ராஜபக்ஷவிடம்

அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, பெசிலிடம் இந்த விடயத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவதாக, பெசில் ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி