உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் இன்று (21) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறான 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கடுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள விசேட ஆராதனையில் பயங்கரவாத தாக்குதலில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று (21) 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக கொழும்பு ஆயர்களின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் நேற்று (20) நள்ளிரவு நடைபெற்றது.

அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர், நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது.

உயிர்த்த ஞாயிறான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

இதனை நினைவு கூறும் வகையிலான குறித்த ஊர்வலமானது, கொழும்பு கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளைச் சந்தி ஹெகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

 

01 WhatsApp Tamil 350

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி