கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளை நாட வேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

சிகிச்சை பெற்று இதுவரையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 ஆகும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 251 பேர் வைத்திய கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி