தேசிய மக்கள் சக்தியின் (திசைக்காட்டி சின்னம்) தலைவர் அநுரகுமார திசாநாயக்க, வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை

மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு, தமிழ் முறைப்படி, ஆரத்தி எடுத்து, பொன்னாடை போர்த்தி, அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு, யாழ்ப்பாணத்தில் இன்று (04) இடம்பெற்றது. "இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில், இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டம் ஒன்றில் இந்த மாநாடு இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AK_5.jpg

 

AK_3.jpg

 

AK_1.jpg

 

AK_4.jpg

 

AK_2.jpg

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி