ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள கஞ்சன விஜேசேகர, பிரசன்ன

ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தக் குழுவினருக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும், எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது குறித்து கஞ்சனா விஜேசேகர கடும் கருத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இந்தக் குழு, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்தக் குழுவினால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாடல் நடவடிக்கைகள், மஹிந்தானந்த அளுத்கமயே தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி