இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போது, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர,

தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர், அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக பிரேரணையை அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு, மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் குணவர்தன, பொருளாளர் ஹெக்டர் பெட்மகே, சிரேஷ்ட உப தலைவர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி