முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்லும்போது, கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ

லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு, அக்கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பியிடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உத்தர லங்கா சபையினால் நேற்று (23) மஹரகம இளைஞர் சேவை மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனிமனித யுகம் முடிந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக வேலைத்திட்டம் மற்றும் கொள்கை யுகம் ஆரம்பமாகியுள்ளதாகவும் 'பிவித்துரு ஹெல உறுமய'வின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்