ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீமுக்கும் இலங்கைக்கான இந்திய

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்றைய தினம் (13), கொழும்பிலுள்ள இந்திய உயர்ஜ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பரும் கலந்துகொண்டுள்ளார் என்று, இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்துச் சமூகங்களின் முழுமையான வளர்ச்சிக்கு, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுமென்று மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா உறுதியளித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி