நோயால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராமை காரணமாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என, ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி முன்னாள் அமைச்சர், கொழும்பில் உள்ள வீடொன்றில் வசிக்கிறார் எனவும் தனது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்க்கு உடல்நலக் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்கு வருமாறு கூறினார் எனவும், ஆனால் வரமாட்டேன் எனக் கூறியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், மேற்படி வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி