வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், பெண்ணின் தலையை துண்டிக்கும் அளவுக்கு அது தீவிரமடைந்துள்ளது. இதேவேளை பெண் பிரதி பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை அங்கிகரிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இடம்பெறும் இத்தகைய செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் முகமாக, எமது கட்சியில் காணப்படும் முக்கிய பொறுப்புகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு கட்சி தலைவர் ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கேரள கடற்பகுதியில் இலங்கையைச் சோ்ந்த 3 படகுகளை சிறைபிடித்த இந்திய கடலோர காவல்படை, அந்தப் படகுகளில் இருந்த 260 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞரொருவர், சிசிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறங்குவார் என்று அரசியல் அரங்கில் பரவிய வதந்திகளால் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் சட்டத்தரணியுமான குமார் சங்கக்காராவுக்கு எதிராக ஊடகங்கள் ஒரு மோசமான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதா என்று சில சமூக ஊடக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் மெர்கல் ஆகியோர் கூறிய விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

சண்டிகரை சேர்ந்த ஒரு பெண்பொலிஸ் அதிகாரி தனது கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி