மாங்குளம் விபத்தில் மூவர் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்றுடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போதே கனரக வாகனம் குறித்த பஸ்ஸில் மோதியுள்ளது.
இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சொகுசு பஸ்ஸின் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரே உயிரிழந்தனர்.