சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

 பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, சுகாதார அமைச்சருக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்