இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய

வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 170 இதய நோயாளிகள் பதிவாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி கோட்டாபய ரணசிங்க இதனை தெரிவித்தார்.


"கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இதய நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 166-170 பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தற்போதைய தரவுகள் அதைத்தான் நமக்குக் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.. நாம் நோயாளிகளை அன்றாடம் பரிசோதிக்கும் போது மேல் மாகாணத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளும் கிடைத்து வருவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அந்த தரவுகளை பார்க்கும் போது கடந்த சில வருடங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணலாம். 

இதய நோயாளிகளின் அதிகரிப்புக்கு உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகளே பிரதான காரணம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

"நமது வாழ்க்கை முறையால் மாரடைப்பு அதிகரித்துள்ளது. நமது வாழ்க்கை முறையின் மாற்றத்தால். குறிப்பாக நாம் உண்ணும் உணவில். உணவில் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவை வேகமாக மாறிவிட்டன. நாம் உண்ணும் மற்றும் குடிக்கும் முறை, நமது வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது.உண்மையில் இலங்கையில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு இந்த வித்தியாசமே காரணம். குறிப்பாக நாம் உண்ணும் உணவில் உள்ள சீனியின் அளவு மிக அதிகமாக உள்ளது. இலங்கையில் ஒருவர் வருடத்திற்கு சுமார் 30 கிலோ சீனியை உட்கொள்கிறார். . மற்றொன்று, நம் உணவின் பெரும்பகுதிக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். உண்ணப்படும் பெரும்பாலான உணவுகள் கார்போஹைட்ரேட் ஆகும், அதாவது உணவு முக்கிய காரணியாகும்."

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி