யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன்

தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் யாழ் நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பரிசோதனையில் சிக்கின. 

இரு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று  (09) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கினார். 

அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று சீல் வைத்து மூடப்பட்டது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி