ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக 100

மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மாதாந்த ஓய்வூதியமாக ரூபாய் 97,500/- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கொடுப்பனவுகள்
தவிர்த்து 54,285 ரூபாய் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாயில் 15 மில்லியன் ரூபாய், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நிதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 85 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை, 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி முதல் 2033ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை வருடாந்தம் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி