முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடி போத்தலில் ஏற்பட்ட வெட்டு காயங்களுடன் குழந்தையின் சடலம் ஒன்று
கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது நேற்று (08) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாலபே - ஹல்பராவ பகுதியை சோ்ந்த சுமாா் 5 அரை வயதான குழந்தையொன்றே உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

குழந்தையின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வே​லைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் குழந்தை இருந்துள்ளமை தொியவந்துள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் சட்ட வைத்திய அதிகாாியின் ஸ்தல விசாரணையும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

இந்நிலையில் குழந்தையின் சடலம், பிரேத பாிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி