இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலை அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய முன்னால் பதவிப் பிரமாணம்

செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவினருக்கு அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பொது மக்களால் “ஹூ” கோசம் இடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்த போதிலும் அவருக்கு எவ்வித எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்களும், நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கேட்டு நிற்பவர்களும் அவர்களிடையே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி