2023 ஆம் ஆண்டுக்கான சிறு போகத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு

சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி உரம் கொள்வனவு செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபாவும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாவும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்த சிறு போகத்தில் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி