ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அந்த அரசின் பிரதமர் நானே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

. இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் பிரதமராக தானே தலைமைத்துவத்தை வழங்குவதாகத் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய  பெரும்பான்மை வாக்குகளினால் பிரதமராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டிருந்தார். அடுத்த நவம்பர் 16ம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய யார் வெற்றி பெற்றாலும் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் அடுத்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி