திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்

உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் 05 பேருடன் பெப்ரவரி 03 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி