ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வேறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருடனும் அரசியல் ஒப்பந்தங்களைச் செய்து

கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவீட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி அவ்வாறான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள வேண்டிய எந்த தேவையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக் காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திசாநாயக்கா ஊடகங்களின் முன் தெரிவித்த கூற்றுக்கு பதில் வழங்கியே நாமல் ராஜபக்ஷ இந்த டுவீட்டர் பதிவியை இட்டுள்ளார்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா பெற்றுக் கொள்ளும் வாக்குகளுளம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். பி. திசாநாயக்கா  அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி