கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. இலங்கைக்கான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை மாலை 5 மணிவரை முன்னெடுக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். 

இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் அப்பகுதிக்கு வந்த பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே கால அவகாசம் தந்துள்ளதுடன், அதற்குள் சத்தியாக்கிரக போராட்டத்தை முடித்து விட்டு அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி