ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று (03) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவைச் சந்தித்து

தான் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பதில் செயலாளர் சட்டத்தரணி ரஜித கொடிதுவக்குவிடம் இது தொடர்பில் கேட்ட போது கூறினார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு கூறினார்.

இந்த வார இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்டை வேட்பாளராக குமார வெல்கமவுக்காக கட்டுப்பணத்தைச் செலும்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி