நாளை(21) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கஹஹேன, ஹங்வெல்ல, ஜல்தர – ரணால, கடுவளை, மாபிட்டிகம மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர்த்தாங்கியை சுத்தப்படுத்தும் பணி காரணமாக குறித்த பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி