ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்

.
இதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநித்துவப் படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சரான அசோக வடிகமங்காவ, பொலனறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் பிரதி அமைச்சரான திலக் மஹலேகம்கே, புத்தளம் மாவட்டத்தின் முன்னாள் பிரதி அமைச்சரான் நியோமால் பெரேரா, காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சரான நந்தமித்ர செய்ஷா மற்றும் கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி சமந்தா கருணாரத்ன ஆகிய ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரே சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சரான உபாலி பியசோம theleader.lk க்குத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியலிலிருந்து விலகியிருந்த முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம சஜித் பிரேமதாசாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் கிடைத்த தினமே மீண்டும் சிரிகொத்தா கட்சி தலைமையகத்திற்குச் சென்று சஜித் பிரேமதாசாவைச் சந்தித்து அவரது தேர்தல் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்வதற்கு இணக்கத்தைத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் பொறுப்பை அவர் முன்னாள் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவிடம் ஒப்படைத்திருந்தார்.

இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவை வழங்குவதற்கு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி.நாவின்னவும் நேற்று (28) இணைந்து கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி