ரீ - 56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டி - மோதரவான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் உடவளவ இராணுவ முகாம் அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து, ரீ-56 துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர்களில் ஒருவரது வீட்டிலிருந்து போலியான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 2 வாகன இலக்க தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கஹவத்தை மற்றும் எம்பிலிப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பதுடன், சந்தேகநபர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி