காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்ததை அடுத்து, கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பண்டாரநாயக்க உருவச்சிலையை சேதமாக்குவதற்கு சிலர் தயாராவதாகக்  கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் இது குறித்து நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கமைய, பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான், பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்க தடை விதித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி