மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 38 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 16 பேர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே 9 அமைதியின்மை தொடர்பில், இதுவரையில் 857 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2,814 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 92 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி