கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகின்றது.

அதற்கமைய, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புகொடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு, இன்று மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி இடம்பெறவுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் நேரம் தொடர்பான விபரம்..

அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழி

5.00 மணிக்கு சிங்கள மொழி

6.00 மணிக்கு தமிழ் மொழி

7.00 மணிக்கு சிங்கள மொழி

8.00 மணிக்கு தமிழ் மொழி

10.00 மணிக்கு சிங்கள மொழி

நண்பகல் 12.00 மணிக்கு ஆங்கில மொழி

மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்படும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி