உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரு தினங்களில் இடம்பெறாதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

7,500 மெட்ரிக் டொன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் ஒரு கப்பல் நாளை (27) நாட்டை வந்தடையும் என்றும், மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை (29) நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கைக்கு வரும் இரு கப்பல்களுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த கப்பல்கள் நாட்டை வந்தடைந்த மறுதினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி