நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான

மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  நிவ்ஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி  உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியாகும்.  இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

“பிளவுகளின்றி ஏதேனும் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றே நாம் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். எனவே தான் போட்டியிட்டால்தான் எமது கூட்டணியாக வெற்றி பெற முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாச நம்பிக்கையுடன் உள்ளார். அவ்வாறு நம்பிக்கையுடன் இருப்பவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களினுள்ளும் இருப்பதை நான் அறிவேன். காரணம் அவர்கள் கோரிக்கையில் ஒப்பமிட்டு வழங்கியிருக்கின்றார்கள். கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே போட்டியிட வேண்டும்”



அமைச்சர் ராஜித சேனாரத்ன தவிற ஐக்கிய தேசிய முன்னணியினைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய கட்சிகளின் அனைத்து தலைவர்களினதும் ஒத்துழைப்பு சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்துள்ளதாக  “ராவய” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், ரிசாட் பதியுத்தீன், பீ. திகாம்பரம், பீ. ராதாகிருஷ்ணன் போன்ற கட்சித் தலைவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மாத்திரமின்றி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஹெல உருமயவின் ஒத்துழைப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் கூறியதாக “ராவய” பத்திரிகையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி