மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியிலேயே மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மின் வெட்டு பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


"உங்கள் வீட்டில் மாத்திரம் எவ்வாறு மின்சாரம் என மக்கள் கூச்சல் " எழுப்பி வருகின்றனர்.


இந்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பொருளாதார நெறுக்கடிக்கு பின்னர் குறித்தப்பகுதிக்கு முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு,  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி