1200 x 80 DMirror

 
 

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் டீசல் விலையை அதிகரித்தாலும் ஒரு லீற்றர் டீசலுக்கு 120 ரூபா நஷ்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் அதிகரித்த எரிபொருள் விலையேற்றமானது பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையே ஈடுகட்டுவதாக அவர் தெரிவித்தார்.


ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு 120 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

டீசலுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 ரூபாவால் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

40,000 மெட்ரிக் தொன் டீசலை இறக்குமதி செய்வதற்கு முன்னர் 32 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. எனினும் உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக 51 மில்லியன் டொலர்களாக அது அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் பழைய விலைக்கே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருளை விற்பனை செய்திருந்தால், இந்த மாதம் 26 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 76 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி