1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படுமா என்பதற்கான சாத்தியமே தென்படாத நிலையே காணப்படுவதாக “ரட்டே ரால” அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மீண்டும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதற்கு சில காரணங்கள் ஏதுவாக அமைந்திருக்கின்றன. ஒரு விடயம் இந்த தினங்களில் பேராயர் மேற்கொண்ட வத்திக்கான் விஜயம். அடுத்ததாக ஒரே தடவையில் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் அறிக்கைகள் அனைத்தையும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முன்வைக்க எடுத்த தீர்மானம்.

அதற்கு அடுத்ததாக முன்னாள் CID பணிப்பாளர் சானி தாக்கல் செய்த மனித உரிமை தொடர்பான வழக்கு. இக்காரணங்களால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயம் மேல் வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடிப்படையில் அதனை பரிசீலனை செய்கின்றனர். எவ்வாறு இருந்த போதிலும் இந்த புதிய கருத்தினுள்ளே அரசியலும் காணப்படுகின்றது.

ரட்டே ராலவின் “ பேராயர் அரசாங்கத்தை கவிழ்ப்பாரா” என்ற ஆக்கத்தில் கத்தோலிக்க சபை எடுக்கக்கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ரட்டே ரால எடுத்துரைத்தார். தற்போது சிறப்பாக காணக்கூடிய ஒரு விடயம் ஒன்று உள்ளது. தற்போது கத்தோலிக்க சபை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை இந்த அரசாங்கத்திடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் அதனை எதிர்பார்ப்பது ஒன்று சர்வதேசத்திடம் இல்லையென்றால் அடுத்ததாக நியமிக்கப்படும் அரசாங்கத்தில். எவ்வாறாயினும் இந்தப் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பேராயரின் வத்திக்கான் விஜயத்தை அறிமுகப்படுத்த முடியும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பாப்பரசர் மற்றும் இன்னும் பல குழுக்களை அவர் சந்திக்கும் வகையில் கால அட்டவணையை தயாரித்தே சென்றுள்ளார். அதனிடையே ஐக்கிய அமெரிக்க குடியரசின் பேராயரும் உள்ளாராம்.

எவ்வாறு இருப்பினும் பேராயர் அவர்கள் தற்போது உள்ள நிலவரம் தொடர்பில் ஒரு breaf ஒன்றை ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்கு அனுப்ப கூடிய முயற்சி எடுக்கின்றார். உண்மையில் இந்த இரு செயற்பாடுகளும் சர்வதேச ரீதியாக அரசாங்கத்தினுடைய செயற்பாட்டையும் ராஜபக்சக்களின் இராஜதந்திரதன்மைக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று எந்த சந்தர்ப்பத்திலும் இது தொடர்பில் எங்களுக்கு சர்வதேச அழுத்தங்கள் வரலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் சுயாதீனமான சர்வதேச பரிசீலனை மேற்கொள்ளுங்கள் என கேட்கவும் முடியும். அவ்வாறு ஒரு முன்மொழிவு வந்தால் அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத்து போன்று எதிர்க்க எவ்வித காரணமும் கிடையாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுள் சர்வதேசத்தை சேர்ந்தவர்கள் பலரும் இருந்திருக்கின்றார்கள். பேராயர் அவர்கள் வத்திக்கானுக்கு மேற்கொண்ட விஜயமானது இந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் அழுத்தங்கள் மிக்க ஒரு சந்தர்ப்பமாகும். ரஷ்யா -உக்ரைன் நெருக்கடி மிகக்கூடிய பட்சத்தில் காணப்படுகின்றது. தற்போது ரஷ்யா இரானுவம் உக்ரேனுக்குள் நுழைந்து விட்டனர்.

உண்மையில் தற்போது யுத்தம் ஆரம்பித்துள்ளது. தற்போது ஐரோப்பாவுக்கு இந்த நிலையை முன்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் இதனை பார்ப்பது ஐரோப்பாவுக்கு ஒரு நெருக்கடியான நிலையை போல நேட்டோவுக்கும் நெருக்கடியான நிலையாக. இந்நிலை மேலும் உக்கிரமடையும்போது ஏனைய பிரதேசங்களின் நிலையை கவனத்தில் கொள்ளாமல் இருக்க நேரிடலாம்.

அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் வரும். இருப்பினும் உலக யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதிக நாட்கள் செல்வதற்கு முன்னர் அந்தப் பிரச்சினை மீண்டும் ஏற்படலாம். அடுத்ததாக அரசாங்கம் ஒரே சந்தர்ப்பத்தில் முழுமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு முன்வைத்தது. அதிகமானவர்கள் அது தொடர்பில்புதுமை அடைகின்றார்கள். சிலர் கூறுவது அவை நடைபெற்றது ஜெனீவா மனித உரிமை மாநாடு என்பதனால்.

இன்னும் சிலர் சொல்லுகின்றார்கள் பேராயரின் வத்திக்கான் விஜயம் என்பதனால். சானி தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு என சிலர் குறிப்பிடுகின்றார்கள். அடுத்ததாக பூஜித்த மற்றும் ஹேமசிரிக்கு வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அந்த காரணங்கள் கூடுதலாக குறைவாக அமைந்திருக்கக் கூடும். ரட்டே ரால குறிப்பிடுவது இதற்கு புறம்பாக அதனுள்ளே வேறு காரணங்கள் இருக்கலாம் என்று.

இருப்பினும் அரசாங்க பக்கம் ஈஸ்ட்டர் தாக்குதலிற்கு பெட் பண்ணும் முறையில் மாற்றத்தை செய்ய முற்படுகின்றாரகள் என ரட்டே ராலவுக்கு தோன்றுகின்றது. அவர்கள் கயிற்றை சற்று இலக்கி பதில் வழங்க தோன்றுகின்றது. எவ்வாறு இருந்த போதிலும் அரசாங்க பக்கத்திலும் அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வேலையை அரசாங்கத்திற்கு சிறிய காலத்துக்கு மேற்கொள்ள முடியும். அதே போன்று இந்த பதிவுகளை பரிசீலனை செய்வதற்கு கத்தோலிக்க சபை அடுத்தத கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு எடுக்கும் காலம் அரசாங்கத்திற்கு தேவை.

அரசாங்கத்துக்கு முடியும் இந்த எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான பிளேன் செய்வதற்கு. அந்த சந்தர்ப்பத்தில் ஜெனீவாவும் முடிவடைந்துவிடும். அரசாங்கம் இதனை பிளேன் செய்யும் முறையானது ரட்டே ராலவுக்கு தெரியும். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை இந்த சந்தர்ப்பத்தில் கூறமுடியாது.

இருப்பினும் சானி தொடுத்துள்ள மனித உரிமை வழக்கு அரசாங்கத்திற்கு இதன்போது ஒரு தடையாக இருக்க முடியும். ஏனென்றால் FR என்பதால் அதனை விரைவாக எடுக்க வேண்டி ஏற்படும். தற்போது வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் இன்னும் பல புதிய விடயங்கள் வெளிவரலாம். அதனை சபாநாயகரும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேபோன்று சானியின் அடிப்படை உரிமை மீறல் மனுவில் புதிய விடயங்கள் பல பல வெளியில் வந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் சமூகத்தின் உள்ளே கதைக்கப்பட்டு கொண்டிருந்த விடயங்கள் தற்போது சானியின் தகவல்கள் மூலமாக வெளியில் வந்து இருக்கின்றது.

சானியின் கருத்துப்படி இந்த தாக்குதலை அரச புலனாய்வுப்பிரிவின் பிரதானிக்கு முன்னமே தெரிந்த ஒன்று என்று. அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஏற்கனவே அந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதும் அவ்வாறுதான்.

இருப்பினும் அந்த கொலையின் உண்மையை உளவுப்பிரிவினர் மறைத்ததாக சானி குற்றம் சுமத்துகின்றார். சஹ்ரான்கள் மேற்கொண்ட குறித்த கொலைக்கு எந்த அடிப்படையிலும் தொடர்புபடாத முன்னாள் மூன்று LTTE அங்கத்தவர்கள் பொய்யாக கைது செய்யப்பட்டார்கள் என்று சானி குறிப்பிடுகின்றார்.

சானி குறிப்பிடுகின்ற அடிப்படையில் விசாரணை சரியான முறையில் நடைபெற்று இருந்தால் ஏப்ரல் 21 தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று. அதனை தடுப்பதற்கு யார் முன்வரவில்லை என்ற பிரச்சினை ஏற்படுகின்றது. மைத்திரி அல்லது உளவுப்பிரிவு அதிகாரிகளா என்று. அதனிடையே இன்னோர் பிரச்சினை ஏற்படுகின்றது. அவ்வாறாயின் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்களை கொலை செய்தது சஹ்ரான் இல்லை என்றே அரசியல் அதிகாரம் அறிந்துள்ளது.

சானியின் படி இந்த இடத்தில் அரசியல் அதிகாரத்தை ஏமாற்றியுள்ளார்கள். அவ்வாறாயின் இந்த நிலை தொடர்பில் சரியான மதிப்பீடு அரசியல் தலைமைக்கு இருந்ததா என்று ஒரு பிரச்சினை ஏற்படுகின்றது. மைத்திரிக்கு இருக்கக்கூடிய ஒரு plus point . அப்படியாயின் இதற்கு பின்னால் ஒரு திட்டம் இருக்கிறது என்பதை காணமுடிகின்றது. அத்தாக்குதல் நடைபெறும்வரை ஏமாற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்ற விடயம் சந்தேகமாக இருக்கின்றது.

அடுத்ததாக பூஜித்த மற்றும் ஹேமசிரியை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது உளவுப்பிரிவு வழங்கிய தகவல் உளவுத்தகவல் அல்ல என்று. அதனைத்தான் சானி குறிப்பிடும் கதையை கேட்கும்போது உளவுப்பிரிவின் பிரதானி தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு அதனை பாதுகாப்பு பிரிவுகளோடு பகிரவில்லை என தோன்றுகின்றது. அதேபோன்று தாக்குதல் நடைபெற்று சில மணித்தியாலங்களுக்கு பின்னர் உளவுப்பிரிவு பிரதானியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வழங்கப்படாமல் இருந்தது தொடர்பில் சானியின் கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலிருந்து இந்த இடத்தில் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. ஏன் எனில் அரசியல் அதிகாரத்தை பெற முஸ்லிம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என கத்தோலிக்க சபை தெரிவித்து விட்டது. அடுத்ததாக இவ்வளவு காலமாக சமூகத்தில் பரவும் சொனிக் சொனிக் என்ற பெயரைச்சூழ தற்போது புதிய கதையை இணைக்கும் வகையில் தகவல்கள் வெளியில் வந்துள்ளது. உண்மையில் சானி குறிப்பிடும் இந்த விடயங்களை மத்திஸ்த்தமாகவே பார்க்க வேண்டும். அவை உண்மையாகவும் முடியும் பொய்யாகவும் முடியும்.

அதற்கான இறுதி கருத்தை சொல்லக்கூடியமாக அமைவது சானியின் வழக்கு தீர்ப்பை பொருத்தே அமையும். இருப்பினும் இந்த இடத்தில் இவ்வாறானதொன்று நடைபெற முடியும். சானி குறிப்பிடும் விடயங்கள் வெளியில் வந்துள்ள உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் காணப்படுமாயின் அது உண்மையிலேயே பாரதூரமான நிலையாகும். அவ்வாறு நடைபெற்றால் அது அரசாங்கத்திற்கு பாரிய அரசியல் தோல்வியை ஏற்படுத்த முடியும். அதனால் தற்போது காரணங்கள் ஒழுங்குபடுத்தலின்கீழ் இந்தப் பிரச்சினையை யாரும் மூடிமறைக்க முடியாது. அப்படி செய்வதாயின் இதனோடு தொடர்புபட்ட ஒருவர் என்றவாறு brand குத்தப்படும்.

இந்த இடத்தில் இந்த விசாரணை மற்றும் புதிய பரிமாணத்திற்கு கொண்டு வரமுடியாமலும் இல்லை. எவ்வாறு இருந்த போதிலும் காலம் தாழ்த்த தாழ்த்த இவ்விடயம் அரசாங்கத்திற்கு மேலும் கறையை ஏற்படுத்தும். அதன்போது சரியோ பிழையோ அரசாங்கத்திற்கு சாதகமற்ற தன்மைகள் மக்களின் உள்ளங்களில் உறுதிப்படுத்தும்நிலை ஏற்படும். எவ்வாறு இருந்த போதிலும் சானி கொண்டு வருகின்ற அந்த விடயங்கள் போன்று உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடாக உயிர்த்த ஞாயிறு வழக்கு எவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டாலும் அது அரசியல் நெருக்கடிக்கு செல்வதனை நிறுத்த முடியாது.

அதேபோன்று இவ்வழக்கின் முக்கிய சாட்சியான சானிக்கு உயிர் அச்சுருத்தல் ஏற்பட முடியும் என்று இந்த தகவல்களை ஒழுங்கமைப்பை செய்யும்போது நினைக்க தோன்றுகின்றது. மேலும் தற்போது தினம்தோறும் புதிய தகவல்கள் வெளிவரலாம். சில சமயங்களில் மனச்சாட்சிகளும் வர முடியும். ஏன்எனில் மக்களின் உள்ளங்களை எப்போதும் கட்டுப்படுத்தி இருக்க முடியாது. கொலைகாரணாயினும் அவ்வாறே. மனச்சாட்சி ஒவ்வொருவருக்கு முறியது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி