1200 x 80 DMirror

 
 

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் தவறியுள்ளதாக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் இலாபத்திற்காக இந்த தாக்குதலை பயன்படுத்தி, உண்மையை மறைத்து, விடயங்களை சிக்கலாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை கண்கூடாக தெரிவாதகவும் பேரவை அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியை தாம் காணவில்லையெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி