1200 x 80 DMirror

 
 

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்துவதை போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் கருத்து வெளியிட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை , 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட பல சாட்சிகளை அரசாங்கமும் , சட்டமா அதிபர் திணைக்களமும் இணைந்து மறைத்துள்ளன.' என்று குற்றஞ்சுமத்தினார்.

அத்தோடு குறித்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 22 பகுதிகள் அடங்கிய முழுமையான அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் , அதற்கான கோரிக்கைகளை விடுத்த போதிலும் , எவ்வித பதிலும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.

பேராயர் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதும் , தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியதுமான பகிரங்கப்படுத்த முடியாத சில தகவல்கள் மாத்திரமே ஜனாதிபதியிடம் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண , இதனுடன் தொடர்புடைய எந்தவொரு விடயங்களையும் மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. எந்த வகையிலும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ அதில் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல அறிக்கைகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தெரிவித்துள்ளமைக்கமைய தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியத்துவமுடைய சில காரணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தகவல்களும் பாராளுமன்றத்திற்கும் ஏனைய அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி