நாட்டில் மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது.நாடளாவிய ரீதியல் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,மக்கள் அதிகளவில் மெழுகுவர்த்தியை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இவ்வாறு மெழுகுவர்த்திகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மெழுகுவர்த்தி ஒன்றின் விலையை 15 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெழுகுவர்த்தியை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மெழுகுவர்த்தி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி