இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் தலைநகர் ஜகார்த்தாவில் கட்டிடங்கள் குலுங்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் தீவின் மேற்கு பகுதியினை GMT நேரப்படி 09.05 மணியளவில் 37 கிலோ மீட்டர் (23 மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை மற்றும் உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது பாதிப்போ இல்லை என்றும், கரையோப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் தெரிவித்துள்ளது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி