பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சிறிய ரக விமானமொன்றை அவசரமாக தரையிறக்க முயற்சித்த தருணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

நீர்கொழும்பு − கிம்புலபிட்டிய பகுதியிலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பயாகல கரையோர பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

crash

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி